TAI Youtube Channel

சிவில் வழக்குகளில் போலீஸ் தலையிடாது!

cibil.jpg

சிவில் வழக்குகள் தொடர்பாக விசாரணை இல்லை; உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஒரு சில காவல் நிலையத்தில் போலீசார், பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். சட்டம்- — ஒழுங்கு, குற்றம் தொடர்பான வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வாங்கித் தருவது போலீசாரின் கடமை. ஆனால், போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள அதிகாரிகள் சிலர், சிவில் வழக்குகளில் தலையிட்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்து வருகிறது.இதனால், ‘சிவில் வழக்குகளில் போலீசார் தலையிடக் கூடாது’ என, பல்வேறு நீதிமன்றங்கள் அவ்வப்போது அறிவுரை, ஆணைகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் ‘சிவில் வழக்குகள் இங்கு விசாரணை செய்ய மாட்டோம், என்று சில காவல் நிலையத்தில் சொன்னால் கூட சிலர் மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பது போன்ற காரணங்களால் காவல் நிலையத்தில் வேறு வழியில்லாமல் பஞ்சாயத்து செய்ய வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருகிறார்கள். பிறகு காவல்துறையினர் சிவில் வழக்குகளில் தலையிட்டுகிறர்கள் என்று புகார் தெரிவிப்பது என்ன நியாயம். சிவில் சம்மந்தப்பட்ட புகார், வழக்குகள் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை போலீசார் விசாரணை செய்யக் கூடாது. அப்பிரச்னை தொடர்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே போலீசார் விசாரிப்பர். குறிப்பாக, சொத்து பாகப் பிரிவினை, வாடகை தர மறுத்தல், வீட்டை காலி செய்யாமல் இருத்தல், குத்தகை விடுதல், ரத்து செய்தல், இடப்பிரச்னை தொடர்பாக போலீசார் விசாரணை செய்யக் கூடாது. அவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதே போல, கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்னை என்றால் அவர்கள் உரிய மகளிர் போலீஸ் ஸ்டேஷனை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாத நிலையில், சிவில் பிரச்னைகளில் தலையிட போலீசாருக்கு உரிமை இல்லை.

scroll to top

You cannot copy content of this page

error: Content is protected !!